கோவை மாவட்டம், சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட அருந்ததி இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அருந்ததியர் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி கிராமம் மற்றும் கள்ளப்பாளையம், இடையர்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மற்றும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி கிராமம் மற்றும் கள்ளப்பாளையம், இடையர்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மற்றும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.