ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனை சார்பில் இரத்ததானம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தன்னார்வ இரத்ததானம் தினம் அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையின் ட்ரான்ஸ்ப்யூஷனால் மெடிசின் துறை சார்பில் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள், இரத்த கொடையாளர்கள், ஒற்றை தானம் ப்ளேட்லெட் கொடையாளர்கள், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வ இரத்த கொடையாளர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் இரத்த வங்கிக்கான அயராது பணியாற்றிய ஆர்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தியது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த பாராட்டு விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி வி.ராமகிருஷ்ணா தலைமை விருந்தினராக பங்கேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், மருத்துவர் சுகுமாரன், மருத்துவ தலைவர் ஐசக் கிரிஸ்டியன் மோசஸ் மருத்துவ இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட இரத்த தானம் அமைப்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இரத்ததானம் அதிகமாக செய்த அருள் கோகுல் தாஸ், கலந்துகோண்டு நன்கொடை மற்றும் இரத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமை குறித்து பேசினார். 

நோய்தடுப்பு இரத்தவியல் & ட்ரான்ஸ்ப்யூஷனால் மருத்துவ ஆலோசகர் ஸ்ரீதர் கோபால் பேசுகையில், மாணவர்கள் ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களை தன்னார்வ ரத்த தான ஊக்குவிப்பதில் இரத்த கொடை அமைப்பாளர் பங்கேற்போடு, இரத்த தானம் குறித்து எண்ணங்கள் பகிர்வு, முக்கியத்துவம் மற்றும் ஒற்றை தானம் ப்ளேட்லெட் தேவை. பிளாஸ்மா பரிமாற்றம் (TSA), மற்றும் மருத்துவமனையில் இரத்த தேவையை வலியுறுத்தினார். மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் எதிர்வரும் தேவைகளுக்கு இரத்த நன்கொடை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...