ஈஷா அறக்கட்டளை நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையத்துடன் இணைந்து குறிச்சி குளத்தை தூர்வாறும் பணியை கடந்த ஜூலை 22-ம் தேதி துவங்கியது. குறிச்சி குளப்பணியில் குமரகுரு கல்லூரி மாணவர்களும் சேர்ந்து குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், குறிச்சி குளத்தில் ஈஷா அறக்கட்டளையினால் இயற்கை முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நீரை சோதனை செய்வதிலும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவி வருகின்றனர். துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறிச்சி குளம் தூர்வாரும் பணி அடுத்த 20 நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சி குளம் தூர்வாரும் பணி குறித்து ஈஷா மையம் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், அடுத்த மழை பெய்யும் போது வரும் நீரை தேக்கி வைக்க குறிச்சி குளம் தயாராகிவிடும். குளத்தின் நடுவே இருக்கும் தீவுத்திட்டில் மரம் நடும் பணியும் ஈஷாவினால் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு அனுமதித்தால் அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குறிச்சி குளத்தை மாதிரியாக உருவாக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும், குறிச்சி குளத்தில் ஈஷா அறக்கட்டளையினால் இயற்கை முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நீரை சோதனை செய்வதிலும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவி வருகின்றனர். துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறிச்சி குளம் தூர்வாரும் பணி அடுத்த 20 நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சி குளம் தூர்வாரும் பணி குறித்து ஈஷா மையம் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், அடுத்த மழை பெய்யும் போது வரும் நீரை தேக்கி வைக்க குறிச்சி குளம் தயாராகிவிடும். குளத்தின் நடுவே இருக்கும் தீவுத்திட்டில் மரம் நடும் பணியும் ஈஷாவினால் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு அனுமதித்தால் அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குறிச்சி குளத்தை மாதிரியாக உருவாக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
