பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத வார்டு மக்கள் அதிகாரிகளை அணுக வேண்டும் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுக் கழிப்பிட வசதியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.  மேலும், நூறு வார்டுகளிலும் 100 சதவீத திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக துண்டுபிரசுங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் பலனாக, பொதுமக்கள் மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில, காமராஜபுரம், லைட் ஹவுஸ் சாலை, சுப்ரமணிய சாலை, குனியமுத்தூர், சுந்தராபுரம், குறிச்சி, கோவைபுதூர், குனியமுத்தூர், சொக்கம்புதூர், செட்டிவீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் திறந்த வெளியில் மக்கள் மலம் கழிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு ரூ.600 அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மேலும், நகரில் பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத மக்கள் அந்தந்த வார்டு அதிகாரிகளை அணுகி, பொதுக்கழிப்பறை செய்து தரக் கோரி மனு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...