இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் ”ஆடி ஏ5” பிராட்பேக்

ஆடி இந்தியா நிறுவனம் ஏ5 ரகத்தில் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு கார்களை வெளியிட்டுள்ளது.



இந்த கார்களின் விலை முறையே ரூ.54.02 லட்சம், ரூ.67.15 லட்சம், ரூ.70.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட் ரகமும் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகும் மாடல்கள் எனவும், எஸ் 5 மட்டும் அப்கிரேட் செய்யப்பட்ட ரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிதாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், உயர் செல்திறன்மிக்க ஓட்டங்கள், புதுமை படைக்கும் பொழுதுபோக்கு அம்சத்துக்கான தீர்வுகள், வீர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஆடி இன்டர்பேஸ் மொபைல்போன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 



ஆடி இந்தியாவின் தலைவர் ரகில் அன்சாரி கூறுகையில், ஆடியின் மறுகட்டமைப்பு ஆண்டாக 2017 உள்ளது. ஏ5 வகை இந்த புதிய சகாப்தத்தின் துவக்கம். புதிய மாடல், புதிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவில் சொகுசான ஒரு பயணத் தீர்வை உருவாக்கின்றனர்.  ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் போன்ற கார்களை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவில் 2017-ல் எங்களது அறிமுக இலக்கான 10 எண்ணிக்கையை எட்டி விட்டோம்.  என்றார். 



ஆடி கோயம்புத்தூர் முதன்மை டீலர் அனந்தகிருஷ்ணன் பேசுகையில், ஆடி ஏ5 இந்த மண்டலத்தில் சந்தைப்பங்கினை அதிகரிக்கும். அனைவரும் ஆவலுடன்  இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...