நாட்டின் வரிமுறையில் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்று, கோரிக்கைளைத் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பல மணி நேரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியம் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இனி நகை வாங்க பான் கார்டோ அல்லது ஆதார் எண்ணோ அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நிதியாண்டில் 2 கோடி ரூபாய்க்கு மேல் நகை, விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கும், ஏ.சி. உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுகிறது.
அதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியம் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இனி நகை வாங்க பான் கார்டோ அல்லது ஆதார் எண்ணோ அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நிதியாண்டில் 2 கோடி ரூபாய்க்கு மேல் நகை, விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கும், ஏ.சி. உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுகிறது.