புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை மற்றும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிச்சி பிரபாகரன் தலைமையில் குறிச்சி பகுதி திமுக-வினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகிறது.
கோவை மாநகரத்தில் தரமான தார் சாலைகளும், வடிகாள்களும் அமைக்கப்படாத நிலையில் வரியினை மட்டும் உயர்த்தி பொதுமக்களை வாட்டும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமி ஆட்களால் மேற்கொள்ளப்படுவதால் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கவணம் செலுத்துவதில்லை.
குறிப்பாக, மாநகராட்சி ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கமுடியாத நிலையில் நிதி நிலைமை மோசமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகிறது.
கோவை மாநகரத்தில் தரமான தார் சாலைகளும், வடிகாள்களும் அமைக்கப்படாத நிலையில் வரியினை மட்டும் உயர்த்தி பொதுமக்களை வாட்டும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமி ஆட்களால் மேற்கொள்ளப்படுவதால் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கவணம் செலுத்துவதில்லை.
குறிப்பாக, மாநகராட்சி ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கமுடியாத நிலையில் நிதி நிலைமை மோசமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.