கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தற்போது, பசுமையை மீட்டுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முந்தைய களப்பணியில் போது விதைப் பந்துகள் வீசும் பணி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, 34-வது தொடர் களப்பணியில் பனை விதை நடும் ஆறாவது வார களப்பணி இன்று நடைபெற்றது. பேரூர் அருகே உள்ள கங்கநாராயணசமுத்திரம் மற்றும் சொட்டையாண்டி குட்டை ஆகிய பகுதியில் நடைபெற்ற இந்த களப்பணியின் போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பனை விதை நடும் களப்பணியில் ஈடுபட்டனர். இந்த களப்பணியின் போது 800 பனை விதைகள் நடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 2ம் தேதியன்று (நாளை) காலை 7 முதல் 11 மணிவரை முத்தண்ணன் குளம் என்ற குமாரசாமி குளத்தில் களப்பணி நடைபெறும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, 34-வது தொடர் களப்பணியில் பனை விதை நடும் ஆறாவது வார களப்பணி இன்று நடைபெற்றது. பேரூர் அருகே உள்ள கங்கநாராயணசமுத்திரம் மற்றும் சொட்டையாண்டி குட்டை ஆகிய பகுதியில் நடைபெற்ற இந்த களப்பணியின் போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பனை விதை நடும் களப்பணியில் ஈடுபட்டனர். இந்த களப்பணியின் போது 800 பனை விதைகள் நடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 2ம் தேதியன்று (நாளை) காலை 7 முதல் 11 மணிவரை முத்தண்ணன் குளம் என்ற குமாரசாமி குளத்தில் களப்பணி நடைபெறும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.