கோவை மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள பயணியர் தங்கும்விடுதி அருகே கோவை - ஈரோடு புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத பெண் கழுத்தறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
சடலத்தின் அருகில் ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை அழுதபடியே உட்கார்ந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீஸார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கொலை செய்யப்பட்டதை அறியாத குழந்தை சடலத்தின் அருகே அழுது கொண்டே இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.