சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் - சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி அறிக்கை

சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்.

இவ்விழா குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும். விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்" என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,  கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அமைச்சர் அவர்களே, சிவாஜி கணேசனுக்கு (எங்கள் தந்தைக்கு) மணி மண்டபம் அமைப்பது என்பது முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார்.

தந்தையின் மணி மண்டபத்தை அரசு திறந்துவைப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், அந்த திறப்புவிழாவில் முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.

தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது தனது தந்தையை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எனவே, திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்,அதிகாரிகள் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் குடும்பத்தினரும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் உங்கள் தரப்பிலிருந்து நல்லதொரு பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு சிவாஜி குடும்பத்தினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...