இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நெசவாளர்களுக்கு அதிகளவு கடனுதவி வழங்கப்படுகிறது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் இன்று (27.09.2017) தமிழ்நாடு பஞ்சாலைகழக புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்திறப்பு விழா, மற்றும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்  தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனியநாதன் முன்னிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து ரூ.2.60 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  



அப்போது பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு அரசு நெசவாளர்களின் நலன் காக்கின்ற வகையில் சீரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையிலே தமிழகத்தில் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கான பிரத்யேக பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட்லிருந்து 750 யூனிட் ஆகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாகவும் உயர்த்தி இலவச மினசாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இன்றைய தினம் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் அலுவலகக்கட்டிடம் ரூ.21 லட்சத்தில் கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் 2,500 சதுரடி பரப்பளவில் புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பஞ்சாலைகழகத்தின் சொந்தமாக 36 விசைத்தறிகளை கொண்ட தறிக்கூடமும், 10 நாடா இல்லா தறிகளைக் கொண்ட ஒரு தறிக்கூடமும், விருதுநகர் மாவட்டம் அறுப்புக்கோட்டையில் 96 தறிகளைக் கொண்ட ஒரு விசைத்தறிக் கூடமும் மற்றும் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 96 கைத்தறிகளைக் கொண்ட விசைத்தறிக்கூடமும் செயல்பட்டு வருகின்றது.



 இந்த விசைத்தறிக்கூடங்களில் 150 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இக்கழகத்தின் மூலம் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான சீருடை துணிகளையும், அரசின் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் விலையில்லா சீருடைத் துணிகளை உற்பத்தி செய்தும் மற்றும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து அரசு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்திட வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 500 நெசவாளர்களுக்கு ரூ.2.50 கோடி கடனுதவிகளும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 60 வயது பூர்த்தியடைந்த 5 உறுப்பினர்களுக்கு ரூ.3.54 லட்சம் மதிப்பிலான சேமிப்புத் தொகை, மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் உயிரிழந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் வழங்கும் கருணை தொகையாக 8 பயனாளிகளுக்கு ரூ.6.8 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பிலான நெசவளார்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, கோ-ஆப்டெக்ஸ் வாரியத்தலைவர் கே.வீ.மனோகரன், தமிழ்நாடு பஞ்சாலைகழக மேலாண் இயக்குநர் நடராஜன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர்  நாகராஜ், உதவி இயக்குநர் சாமிநாதன், பிச்சைமுத்து, தங்கராஜன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல துணை மேலாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...