மதச்சார்பின்மையை உறுதி செய்யும் விதமாக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடக்கூடாது என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் புறநகர மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நமது நாடு மதச்சார்பற்றது என்று நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புறையே கூறுகிறது. மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை வளாகங்களில் மத விழாக்களும், பூஜைகளும் சமீபகாலமாக அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய காலகட்டங்களில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இது போன்ற மத விழாக்கள் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டபோதும் தொடர்ந்து மத விழாக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத வழிபாடுகள் நடத்தக் கூடாது. உங்கள் துறை அலுவலகங்களில் இது போன்ற மத வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் புறநகர மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நமது நாடு மதச்சார்பற்றது என்று நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புறையே கூறுகிறது. மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை வளாகங்களில் மத விழாக்களும், பூஜைகளும் சமீபகாலமாக அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய காலகட்டங்களில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இது போன்ற மத விழாக்கள் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டபோதும் தொடர்ந்து மத விழாக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத வழிபாடுகள் நடத்தக் கூடாது. உங்கள் துறை அலுவலகங்களில் இது போன்ற மத வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.