நலவாரிய செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கையைக் கண்டித்து நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள்

இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இன்று இராமநாதபுரத்தில் செயல்படும் நலவாரிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது விபத்து மரணம், இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட கேட்பு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும். இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும். 6 மாத காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சிஐடியு கட்டிட கட்டுமானச் சங்க பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...