கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையில் தொழிற்நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அதிகாரிகள் மற்றும் முன்னணி இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், தொழில்நகரமான கோவையில் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய நகர்புற தொழில்சாலைத்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அவினாசி அத்திக்கடவு குடிநீர் திட்டம் மற்றும் தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்பட கோவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும், தற்போது, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்பாக அரசு, பங்குதாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும். கோவையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். லாரி பட்டறை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், தொழில்நகரமான கோவையில் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய நகர்புற தொழில்சாலைத்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அவினாசி அத்திக்கடவு குடிநீர் திட்டம் மற்றும் தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்பட கோவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும், தற்போது, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்பாக அரசு, பங்குதாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும். கோவையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். லாரி பட்டறை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
