தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய மெர்சல் டீசர், வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையை மெர்சல் டீசர் படைத்துள்ளது.
இந்த நிலையில், ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், மெர்சல் என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மெர்சலாயிட்டேன் மற்றும் மெர்சல் ஆகிய இரு வார்த்தைகளும் ஒரே அர்த்தம்தான் எனக் கூறியுள்ளார். எனவே தலைப்பை முறைகேடாக டிரேட் மார்க்கில் பதிவுசெய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், மெர்சல் என்ற பெயரில் விஜயின் படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதிகப் பொருட்செலவில் இந்தப்படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்ற தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும்,இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் என்ற பெயரில் படத்தை விளம்பரம் செய்யக் கூடாது எனக் கூறி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், மெர்சல் என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மெர்சலாயிட்டேன் மற்றும் மெர்சல் ஆகிய இரு வார்த்தைகளும் ஒரே அர்த்தம்தான் எனக் கூறியுள்ளார். எனவே தலைப்பை முறைகேடாக டிரேட் மார்க்கில் பதிவுசெய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், மெர்சல் என்ற பெயரில் விஜயின் படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதிகப் பொருட்செலவில் இந்தப்படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்ற தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும்,இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் என்ற பெயரில் படத்தை விளம்பரம் செய்யக் கூடாது எனக் கூறி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.