நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய மெர்சல் டீசர், வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையை மெர்சல் டீசர் படைத்துள்ளது. 

இந்த நிலையில், ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், மெர்சல் என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மெர்சலாயிட்டேன் மற்றும் மெர்சல் ஆகிய இரு வார்த்தைகளும் ஒரே அர்த்தம்தான் எனக் கூறியுள்ளார். எனவே தலைப்பை முறைகேடாக டிரேட் மார்க்கில் பதிவுசெய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள்,  மெர்சல் என்ற பெயரில் விஜயின் படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.  அதிகப் பொருட்செலவில் இந்தப்படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்ற தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.  

மேலும்,இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் என்ற பெயரில் படத்தை விளம்பரம் செய்யக் கூடாது எனக் கூறி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...