இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக. இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். தொடர்ந்து ஓ.பி. எஸ் ., மற்றும் பழனிசாமி அணியினர் இணைந்த நிலையில் மீண்டும் இரட்டை சிலைசின்னத்தை மீட்க முடிவு செய்தனர். இந்நிலையில் சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து வரும் 29-ம் தேதிக்குள் இரு தரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் எனவும், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதிக்கு பின்னர் கூடிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் சமர்பிக்கும் படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக. இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். தொடர்ந்து ஓ.பி. எஸ் ., மற்றும் பழனிசாமி அணியினர் இணைந்த நிலையில் மீண்டும் இரட்டை சிலைசின்னத்தை மீட்க முடிவு செய்தனர். இந்நிலையில் சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து வரும் 29-ம் தேதிக்குள் இரு தரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் எனவும், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதிக்கு பின்னர் கூடிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் சமர்பிக்கும் படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.