பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான குட்கா பான் மசாலாக்கள் கொண்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெரால்டு சத்ய புனிதன் சரவணம்பட்டி பகுதியில் லாரிகளை பறிமுதல் செய்து, அவற்றை பதுக்கி வைக்க இருந்த குடோன்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், அதிகாரி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது குடோனில் இருந்த குட்கா விற்பனையாளர்களான பவர் லால் (32), மஹிலால் (43), ஹனுமராம் (21) உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியை காட்டி மிரட்டியது.
இது தொடர்பக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கத்தியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததோடு அவர்களை கைது செய்து சிறையலடைத்தனர்.
இந்நிலையில், அதிகாரி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது குடோனில் இருந்த குட்கா விற்பனையாளர்களான பவர் லால் (32), மஹிலால் (43), ஹனுமராம் (21) உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியை காட்டி மிரட்டியது.
இது தொடர்பக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கத்தியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததோடு அவர்களை கைது செய்து சிறையலடைத்தனர்.