தமிழக அரசால் நீட் பயிற்சி மையங்கள் கொண்டுவந்தால், கிராமப்புற மாணவர்களுக்கு ஆதாயம் கிட்டுமா..?

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்த்துள்ள தமிழக அரசு, மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தி வருகிறது. 

மேலும், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையமும் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்றும், நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி நீட்-டுக்கு எதிராக தமிழக மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். 

மேலும், பெரும்பாலான குழந்தைகள் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தமிழ் வழியில் கல்வி பயின்று வருவதாகவும், இதனால், நீட் தேர்வுக்கான பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

இதனிடையே, கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் முறை மேம்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்".  இவ்வாறு அவர் கூறியிருந்தார். 

அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனத்திடம், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி அளித்து வரும் கனகராஜ் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழகம் நல்ல நிலையில்தான் உள்ளது. தற்போதைய நீட் தேர்வை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் முறையான பயிற்சி மையங்கள் மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்தால்,  மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. 

நகர் மற்றும் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் செயல்படும் தனியார் பயிற்சி மையங்களும் நீட் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நடக்குமாயின், நீட் தேர்விலும் தமிழக மாணவர்களின் நிலை கொடி கட்டி பறக்கும்". இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...