செப்டம்பர் 8, (இன்று) உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவ முகாம் சரவணம்பட்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளை பரிசோதனை செய்து பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
குறிப்பாக, அதிக எடையுள்ள தோள் பையை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடல் வலி வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் பிசியோதெரபி மருத்துவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர்.ராஜேஸ் கண்ணா கூறுகையில்:-
குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் உடல் வலிமை மற்றும் உடல் உழைப்பு இல்லாததுதான். அதேபோல் குழந்தைகளை அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கலாம்.
குறிப்பாக மோபைல் போன், வீடியோ கேம், கணினி போன்றவற்றில் விளையாடும் விளையாட்டை தவிர்த்து விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாடும் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களை தடுக்க முடியும். மேலும், இது மனநோயை தவிர்க்கவும் மனிதநேயத்தை வளர்க்கவும் உதவும்' என்று கூறினார்.
முன்னதாக, இந்த முகாமில் கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் ராஜா செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் புவனேஸ்குமார், இளவரசி, வினோதினி மற்றும் பலர் இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளை பரிசோதனை செய்து பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
குறிப்பாக, அதிக எடையுள்ள தோள் பையை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடல் வலி வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் பிசியோதெரபி மருத்துவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர்.ராஜேஸ் கண்ணா கூறுகையில்:-
குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் உடல் வலிமை மற்றும் உடல் உழைப்பு இல்லாததுதான். அதேபோல் குழந்தைகளை அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கலாம்.
குறிப்பாக மோபைல் போன், வீடியோ கேம், கணினி போன்றவற்றில் விளையாடும் விளையாட்டை தவிர்த்து விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாடும் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களை தடுக்க முடியும். மேலும், இது மனநோயை தவிர்க்கவும் மனிதநேயத்தை வளர்க்கவும் உதவும்' என்று கூறினார்.
முன்னதாக, இந்த முகாமில் கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் ராஜா செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் புவனேஸ்குமார், இளவரசி, வினோதினி மற்றும் பலர் இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.