இன்சூரன்ஸ் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியால் காப்பீட்டில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, உடனடியாக மத்திய அரசு இன்சூரன்ஸ் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜிஎஸ்டி வரி விதிப்பின் படி இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நாற்பது கோடிக்கும் மேலானவர்கள் இன்சூரன்சில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த வரியின் காரணமாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதியதாக இன்சூரன்சில் சேருபவர்களின் எண்ணிக்கை இதன் காரணமாக குறைந்து வருகிறது. 

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. அதில் கோவையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த கையெழுத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கிரிஜா தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...