கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (செப்.,5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபானி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக பேரணி நடந்தது.



இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவதாக உறுதியளித்து ஏமாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...