பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை அண்மையில் விரிவாக்கம் செய்தார். அதில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக மாற்றம் செய்தார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசுகையில், திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக தன்னை நியமித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையில் எதிர்பார்த்ததை விட வளர்ச்சியை கொண்டு வருவேன்.
தற்போது, புதிய சுற்றுப்புறச் சூழலை உருவாக்கி, மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்டமாக, திட்டங்களுக்கான அளவு மற்றும் வேகத்தை மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.
அதிக சவால்கள் இருக்கக்கூடிய இந்தத் துறையில் உள்ள இடைவேளைகளை நிரப்பி, மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, மாநில திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அனந்த்குமார் ஹெட்ஜ்டே பேசுகையில், மாநில திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக தன்னை நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதல்படி, கொள்கைக்காகவும், சுற்றுசூழல் திறனை மேம்படுத்த பணியாற்றுவன் என்றார்.