கோவை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தன்னை திருமனம் செய்து ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் இரு பெண் குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா உடையார்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பன்னீர் செல்வம். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், 7 வயது மற்றும் இரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் மனைவி மஞ்சுளா இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னையும், இரு குழந்தைகளையும் அவருடைய குடும்பத்துடன் சேர்த்துக் கொள்வதில்லை. இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து, கடந்த இரண்டு மாதங்களாக பொள்ளாச்சி துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் மனு அளித்தும் இது வரை எவ்வித பயனுமில்லை. தன் கணவருக்கு ஆதரவாகவே அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
ஒருதலைபட்சமாக செயல்படும் அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு பெண் குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்டு தன் கணவரிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மஞ்சுளா ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா உடையார்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பன்னீர் செல்வம். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், 7 வயது மற்றும் இரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் மனைவி மஞ்சுளா இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னையும், இரு குழந்தைகளையும் அவருடைய குடும்பத்துடன் சேர்த்துக் கொள்வதில்லை. இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து, கடந்த இரண்டு மாதங்களாக பொள்ளாச்சி துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் மனு அளித்தும் இது வரை எவ்வித பயனுமில்லை. தன் கணவருக்கு ஆதரவாகவே அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
ஒருதலைபட்சமாக செயல்படும் அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு பெண் குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்டு தன் கணவரிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மஞ்சுளா ஆட்சியரிடம் மனு அளித்தார்.