திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வழங்கினார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பவள விழா, கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின்போது 2006-ல் இலவசமாக கேஸ் இணைப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து, 11 ஆண்டுகளாக இலவச கேஸ் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்த திட்டம் ரத்தாகி உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற நிலை மீண்டும் வரப்போகின்றது.
ரேஷன் பொருட்கள் ரத்து, குடிநீர் பிரச்சனை என பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சனைகள் தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு திமுக மகளிரணியினர் கொண்டு செல்ல வேண்டும். விரைவில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கு பெண்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பவள விழா, கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின்போது 2006-ல் இலவசமாக கேஸ் இணைப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து, 11 ஆண்டுகளாக இலவச கேஸ் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்த திட்டம் ரத்தாகி உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற நிலை மீண்டும் வரப்போகின்றது.
ரேஷன் பொருட்கள் ரத்து, குடிநீர் பிரச்சனை என பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சனைகள் தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு திமுக மகளிரணியினர் கொண்டு செல்ல வேண்டும். விரைவில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கு பெண்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு சில்வர் குடங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.