சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே நோக்கம்- கோவை மத்திய சிறை ஆய்வுக்கு பின் சைலேந்திரபாபு பேட்டி

சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நோக்கம் என கோவை மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

கோவை மத்திய சிறை 1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பழமை மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்த சிறையில் தற்போது 1720 கைதிகள் உள்ளனர். பெண்களுக்கு தனியாக சிறை உள்ளது. கோவை மத்திய சிறை வளாகத்தில் பல ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ளன. மேலும், புதிதாக 10 ஆயிரம் மரங்கள் நட முடிவுசெய்யப்பட்டு தற்போது 2 ஆயிரம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களுக்கு சிறைவாசிகளே தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

மேலும், சிறைக் கைதிகள் மற்றும் இங்கு வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளுக்கென டெக்ஸ்டைல் மில்லும் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர்கள் அணியும் காக்கி துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் பல்கலைக் கழகம் மூலம் கல்வி மேற்கொண்டு வருகின்றனர். இன்று கோவை மத்திய சிறையில் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றுவதே எங்களது நோக்கம். மேலும், சிறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...