தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டம்

கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில், விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்ததது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளுக்கிடையேயான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. மக்கள் சேவை மையம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 40 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்தனர். 

இளைஞர்கள் மத்தியில் கைத்தறி புடவைக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளாரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் மாவட்டந்தோறும் நூல் வங்கிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,கைத்தறியினை ஊக்குவிக்க நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், கைத்தறி தொழிலாளர்களின் நிலை மற்றும் கைத்தறி புடவைகளின்  மதிப்பு குறித்து இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அவர்,யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் பிரபல நடிகர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு  அரசியலில் நுழைவது  தவறு என குறிப்பிட்டவர் அரசியல் கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரிலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அரசியல் தலைவர்களாகி உள்ளனர் என தெரிவித்த அவர், உடனடியாக நடிகர் ரஜினியோ அல்லது கமல்ஹாசனோ அரசியலுக்கு வந்தால் அவர்களை தலைவராக  ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

இந்த போட்டிகளில பங்கேற்று  முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...