கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Coimbatore: கோவை கண்ணப்பநகர் பகுதியில் உள்ள 11 to 11 டாஸ்மாக் பார் அருகே அமைந்திருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றிய நிலையில் சுற்றியிருந்தவர்களின் மீது தீப்பொறி சிதறியது.
இதில் மதுரை வீரன் (23) என்பவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த மதுரை வீரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் கண்ணப்பநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடிப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றிய நிலையில் சுற்றியிருந்தவர்களின் மீது தீப்பொறி சிதறியது.
இதில் மதுரை வீரன் (23) என்பவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த மதுரை வீரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் கண்ணப்பநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடிப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.