தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டம்

கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகளில், விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்ததது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளுக்கிடையேயான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. மக்கள் சேவை மையம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 40 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் விதவிதமான கைத்தறி புடவைகள் அணிந்து கல்லூரி மாணவிகள் ஒய்யரமாக நடந்து வந்தனர். 

இளைஞர்கள் மத்தியில் கைத்தறி புடவைக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளாரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் மாவட்டந்தோறும் நூல் வங்கிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,கைத்தறியினை ஊக்குவிக்க நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், கைத்தறி தொழிலாளர்களின் நிலை மற்றும் கைத்தறி புடவைகளின்  மதிப்பு குறித்து இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்று இருப்பதாக கூறினார். தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அவர்,யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் பிரபல நடிகர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு  அரசியலில் நுழைவது  தவறு என குறிப்பிட்டவர் அரசியல் கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரிலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அரசியல் தலைவர்களாகி உள்ளனர் என தெரிவித்த அவர், உடனடியாக நடிகர் ரஜினியோ அல்லது கமல்ஹாசனோ அரசியலுக்கு வந்தால் அவர்களை தலைவராக  ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

இந்த போட்டிகளில பங்கேற்று  முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...