மக்காத குப்பை சேகரிப்பு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.5.24 லட்சம் ஊக்கத் தொகை


கோவையில் நூறு சதவிகிதம் தரம் பிரித்து குப்பை சேகரிப்பதற்கான பணிகள் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரத்தில் ஆறு நாட்கள் மக்காத குப்பை சேகரிப்பு, புதன்கிழமை மட்டும் மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய மக்காத குப்பை சேகரிக்கும் திட்டம் ஜூன், 21ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், ஜூன் மாதம் முதல் கோவை மாநகரில் 100 வார்டில் அனைத்து பகுதிகளிலும் வாரத்திற்க்கு ஒரு நாள் மட்டுமென ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் மக்கும் குப்பை சேகரிக்கப்படும்.

இதன் முயற்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் சுலபமாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்ற புதன்கிழமை மட்டும், 209.77 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டது. அவற்றை விற்று வந்த தொகையில், 5.24 லட்சம் ரூபாய் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டது.

மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களை சில தனியார் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. அந்நிறுவனத்தினர் கொடுக்கும் தொகை, தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதனால், 209.77 டன் மக்காத குப்பை சேகரிக்கப்பட்டதில் ரூ. 5.24 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 15.32 டன், மேற்கு - 62, வடக்கு - 25.45, தெற்கு - 27.4, மத்திய மண்டலம் - 79.6 டன் சேகரமானது. கடந்த ஏழு வாரங்களில் 1,005.86 டன் குப்பை சேகரமாகி உள்ளது. 18.45 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இனி வரும் நாட்களில், 300 டன் மக்காத குப்பை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் 'ஸ்பான்சர்' உதவியுடன் தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது' என்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...