சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கூட்டு பண்ணை திட்டத்திற்கான குழு அமைக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான 2017-18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணைய திட்டத்திற்கான குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.

2017- 18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணையம் செயல்படுத்திட தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டு பண்ணையம் திட்டத்தில், 20 நபர் கொண்ட, சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். ஐந்து விவசாய ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு விவசாய உற்பத்திக்குழு ஆரம்பிக்கப்படும்.

வணிக வசதியுடன் கூடிய இக்கூட்டு பண்ணைய முறையில், ஒருங்கிணைந்த பரப்பில் ஒரே பயிரினை உற்பத்தி செய்து, நீடித்த லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலப்பு பண்ணையம், மதிப்பு கூட்டிய வேளாண்பொருட்கள் உற்பத்தி செய்தல் மற்றும் குழுவினரே தொழில் முனைவோராக தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் அடங்கிய உற்பத்திகுழுக்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும், உயரிய வேளாண்மைத்துறை தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலை பெருக்கவும், அரசுத்துறை அலுவலர்கள் உதவுவர்.

உற்பத்தி குழுக்கள் துவங்கும் போது, ஒரு குழுவுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் இருப்பு நிதி (கார்பஸ் நிதி) மூன்று கட்டமாக பரித்து வழங்கப்படும். குழுக்கள், கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 130 விவசாய ஆர்வலர் குழுக்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2600 விவசாயிகள் கூட்டு பண்ணையம் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டட உள்ளனர். தலா 5 ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைந்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இருப்பு நிதியாக மொத்தம் ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்துறையுடன் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகவும். இத்திட்டம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களின் ஆலோசனைப்பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...