கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு


கோவை மாநகராட்சியில் பருவ மழை காலத்தினையொட்டி பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் பருவ மழை பெய்ய உள்ள சூழ்நிலையில், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துவதற்காக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகவளாகங்கள், தொழிற்கூடங்கள், பூங்காக்கள், ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்து குப்பைகளை சேராவண்ணம், அவ்வப்போது புனரமைப்பு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்யும் போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்கள் தெரிய வரும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...