சொத்து வரியுடன் குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு

கோவையில் இனி சொத்து வரியுடன் குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான சேவை வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பாதாள சாக்கடை இணைப்புக்கான கட்டண விவரங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சிகளில் செய்து வரும் பணிகள் நிலுவையில் உள்ள பணிகள், அதற்கான காரணங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மாநகராட்சியின் நிதியாதாரத்தை பெருக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் வருவாய், நடப்பாண்டு இலக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதில், கோவை மாநகராட்சியில் 4.89 லட்சம் வரி விதிப்புகள் உள்ளன. நடப்பாண்டு, 144 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 28 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இது 20 சதவிகிதம் வரி வசூலை முடுக்கி விடுவதோடு நிதி ஆதாரத்தை பெருக்க அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பை வரியாக மாதத்துக்கு 10 ரூபாய் வணிக நிறுவனங்களுக்கு 50 ரூபாய் பெரிய நிறுவனங்களுக்கு கூடுதலாக நிர்ணயிக்க முடிவாகி உள்ளது.

இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ரூ.1.8 கோடி வீதம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்தவும், இணைக்கப்பட்ட பகுதிகளில் அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் பாதாள சாக்கடை இணைப்புக்கும் சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என்றும் இதனை மாமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சியின் நிதியாதாரத்தை பெருக்க வரி வசூலை முடுக்கி விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வார்டு வாரியாக அனைத்து வரி விதிப்புகளும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும். சொத்து வரியுடன் குப்பை வரி சேர்த்து வசூலிக்கப்படும். இனிவரும் காலங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான சேவை கட்டணம் பெறப்படும். கட்டண விவரங்கள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலமாக மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.30 கோடிக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...