ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தங்கள் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. தனது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அணி மாறியதாக கூறும் ஆறுக்குட்டி, இதற்காக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு செல்வாரா ?.
தமிழகத்தில் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த தலைமையில் இருந்து ஆறுக்குட்டி வெளியேறியது வேதனை அளிக்கிறது. வழக்கு உள்ள அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருவதால் மேலும் கட்சி உடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என சொல்ல முடியாது. அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால் பலமிழந்துவிடாது. இரு அணிகள் இணைய தற்போது வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்தார்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.தாமோதிரன் இன்று செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தங்கள் அணியில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. தனது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அணி மாறியதாக கூறும் ஆறுக்குட்டி, இதற்காக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுங்கட்சிக்கு செல்வாரா ?.
தமிழகத்தில் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மரியாதை அளிக்கும் ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த தலைமையில் இருந்து ஆறுக்குட்டி வெளியேறியது வேதனை அளிக்கிறது. வழக்கு உள்ள அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படலாம். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு தொல்லை கொடுத்து வருவதால் மேலும் கட்சி உடைய வாய்ப்புண்டு. இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என சொல்ல முடியாது. அணிகளாக அதிமுக பிளவுபட்டு இருப்பதால் பலமிழந்துவிடாது. இரு அணிகள் இணைய தற்போது வாய்ப்பில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்தார்.