வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் முன்பதிவுகள் ஆரம்பம்

கோவை மாரத்தான் நிகழ்வின் 5-வது பதிப்பு நடைபெறவிருப்பதை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் இன்று அறிவித்தது. இந்நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சராக வோடஃபோன் மற்றும் பவர்டு பை ஸ்பான்சராக எல்ஜி எக்விப்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட முந்தைய 4 பதிப்புகளைவிட மிகப்பெரியதாக நடத்தப்படவிருக்கும் இந்த ஆண்டின் மாரத்தான் 2017 அக்டோபர் 1ம் தேதி நடைபெறுகிறது.

"பெருமைகொள்ளுங்கள்" என்ற கருப்பொருளை தாங்கிய இந்த முதன்மையான ஓட்ட நிகழ்வானது, 15000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்களுள் நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஓடுவதில் ஆர்வமுள்ள நபர்கள் என பலரும் இடம்பெறுகின்றனர்.

வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்வில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதிவு செயல்முறைகளை www.coimbatoremarathon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த மாரத்தான் போட்டியில் அரை மாரத்தான் (21.1 கி.மீ), 10 கி.மீ. ஓட்டம் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நடை ஆகிய வகையினங்களை உள்ளடக்கியதாகும். அரை மாரத்தான் மற்றும் 10 கிமீ ஓட்டத்திற்கான பதிவுக்கட்டணம் ரூ.800 ஆகும். 5 கிமீ ஓட்டம் மற்றும் நடைக்கான பதிவுக்கட்டணம் ரூ.550 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்லத்தக்க மாணவர் அடையாள அட்டையை சமர்ப்பித்து இக்கட்டணத்தில் ரூ.100 தள்ளுபடியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

2.7 லட்சம் என்ற மொத்த பரிசுத்தொகையானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும். 21.1 கிமீ தூரம் கொண்ட பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு இந்த பரிசுத் தொகையானது முறையே ரூ.25,000, 15,000 மற்றும் 10,000 வழங்கப்படும். 

10 கிமீ திறந்தநிலை வகையினத்தில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்களுக்கான பரிசுத்தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வழங்கப்படும். 

மேலும், பல்வேறு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியின் போது பரிசுகளும், பதங்கங்களும் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 918939801188 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...