வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் முன்பதிவுகள் ஆரம்பம்

கோவை மாரத்தான் நிகழ்வின் 5-வது பதிப்பு நடைபெறவிருப்பதை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் இன்று அறிவித்தது. இந்நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சராக வோடஃபோன் மற்றும் பவர்டு பை ஸ்பான்சராக எல்ஜி எக்விப்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட முந்தைய 4 பதிப்புகளைவிட மிகப்பெரியதாக நடத்தப்படவிருக்கும் இந்த ஆண்டின் மாரத்தான் 2017 அக்டோபர் 1ம் தேதி நடைபெறுகிறது.

"பெருமைகொள்ளுங்கள்" என்ற கருப்பொருளை தாங்கிய இந்த முதன்மையான ஓட்ட நிகழ்வானது, 15000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்களுள் நாடெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஓடுவதில் ஆர்வமுள்ள நபர்கள் என பலரும் இடம்பெறுகின்றனர்.

வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்வில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. பதிவு செயல்முறைகளை www.coimbatoremarathon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த மாரத்தான் போட்டியில் அரை மாரத்தான் (21.1 கி.மீ), 10 கி.மீ. ஓட்டம் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நடை ஆகிய வகையினங்களை உள்ளடக்கியதாகும். அரை மாரத்தான் மற்றும் 10 கிமீ ஓட்டத்திற்கான பதிவுக்கட்டணம் ரூ.800 ஆகும். 5 கிமீ ஓட்டம் மற்றும் நடைக்கான பதிவுக்கட்டணம் ரூ.550 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செல்லத்தக்க மாணவர் அடையாள அட்டையை சமர்ப்பித்து இக்கட்டணத்தில் ரூ.100 தள்ளுபடியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

2.7 லட்சம் என்ற மொத்த பரிசுத்தொகையானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும். 21.1 கிமீ தூரம் கொண்ட பாதி மாரத்தான் ஓட்டத்தில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு இந்த பரிசுத் தொகையானது முறையே ரூ.25,000, 15,000 மற்றும் 10,000 வழங்கப்படும். 

10 கிமீ திறந்தநிலை வகையினத்தில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்களுக்கான பரிசுத்தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வழங்கப்படும். 

மேலும், பல்வேறு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த மாரத்தான் போட்டியின் போது பரிசுகளும், பதங்கங்களும் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 918939801188 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...