காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மயக்கமருந்தியல் படிப்பை முடித்த பின், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருடன் படித்த மாணவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், அந்த உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, மாணவியின் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக கோவைக்கு வந்த பெற்றோர், மாணவி தங்கி இருந்த அறையை பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...