குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் - சமூக ஆர்வலர் திருமுருகன்

இந்தியாவில் குழந்தை பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறுவதை தடுக்கும் வகையில் நோபல் பவுண்டேசன் மூலமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்க்கு இதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் 11 நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று குழந்தை பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு முகாமை பல்மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் திருமுருகன் ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று குழந்தை பாலியல் வன்கொடுமை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இது குறித்து பல்மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் திருமுருகன் சிம்ப்ளிசிட்டி செயலியில் நம்மிடம் பாகிந்து கொண்டபோது; குழந்தை பாலியல் வன்கொடுமை இந்தியாவில் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குழந்தைகள் மீது மெளன போர் அதாவது குழந்தைகள் இதை பற்றி பெற்றோர்களிடம் சொல்லாமலும், பெற்றோர்களும் இதை பற்றி ரிப்போர்ட் கொடுக்கவும் முன்வருவதில்லை. இதன் காரணமாகவே தற்கொலை முயற்சிக்கு பலர் ஆளாகின்றனர். ஊடகம் மூலமாகவும் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்.  இதை பற்றி செய்திகளை நான் சேகரித்து இதற்க்கு எதிராக கல்லூரி பருவத்தில் இருந்தே ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தனும் ஒரு முயற்சியில் இந்த விழிப்புணர்வு முகாம் தொடங்கினேன். இந்த விழிப்புணர்வு குறிப்பாக சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசுக்கு கொண்டு செல்வது என்னுடைய முக்கிய நோக்கம். இதற்கு தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளிலும், பொது மக்களிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதற்கு முதலில் மூன்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி பாடத்தில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு புதிய திட்டம், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதை பற்றிய விழிப்புணர்வு முகாம், குழந்தை பாலியல் வன்கொடுமை தடுக்க பெற்றோர்கள் 1098 அல்லது காவல்துறைக்கு ரிப்போர்ட் கொடுக்க முன்வர வேண்டும். 



பொதுவாக, இந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு அரசு சார்பில் கடுமையான சட்ட திட்ட, நடவடிக்கைகள் மாற்ற வேண்டும். சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற பற்றிய விழிப்புணர்வு யாருக்கும் தெரிய வருவதில்லை. குழந்தை பாதுகாப்பிற்குகாக இந்த 1098 என்ற எண்ணிற்கு அரசு சார்பில் முழுமையான தகவல் கொடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், 1098 பொதுமக்களுக்கு அதிக அளவில் தெரியும் வகையில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு மூலம் குழந்தைகளை பெருமளவில் பாதுகாக்கப்படலாம் என்றார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...