பண மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகருக்கு ஜூலை 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்



கர்நாடக அரசின் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு வருகிற ஜூலை 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், கணபதி பகுதியில் சமையலறை சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் ராஜவேலு என்பவரிடம் கடந்த 21.12.2010 அன்று கர்நாடகாவிலிருந்து அழைப்பதாக பிரகாஷ் என்பவர் பேசியுள்ளார். அப்போது கர்நாடக அரசுக்கு சமையல் உபகரணம் வாங்க ஒப்பந்த புள்ளி கோர உள்ளதாகவும், அதற்காக முதல் படிவம் பெற வேண்டும் எனக் கூறி 43 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பின்னர் இரண்டாவது கொள்முதல் செய்வதற்கான படிவம் வாங்க 1.37 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் பெற்ற அவர், மேலும் 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் மீதத்தை திருப்பி செலுத்தி விடுவதாகவும் உறுதியளித்துள்ளார். அது மட்டுமின்றி வைப்பு தொகையாக ரூ.3.50 லட்சம் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு ஆன்லைன் மூலம் கர்நாடக அரசை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் பணம் பெற்றது போலியான நபர் என தெரிய வந்தது.

இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக சுகேஷின் தந்தை சந்திரசேகரும் இரண்டாவது குற்றவாளியாக சுகேஷும் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணைக்காக கடந்த 8-ம் தேதி சுகேஷ் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரை 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று அதிகாலை டெல்லியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை வருகிற ஜூலை மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து கோவையிலிருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுகேஷ் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் டெல்லி அழைத்து செல்லபட இருக்கிறார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...