குடிபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குடிமகன்

கோவை காந்திபுரம்- வேலாந்தாவளம் செல்லும் அரசு பேருந்து எண்: 48A இன்று மாலை 5 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து வேலாந்தவலம் நோக்கி சென்றது.

இந்த பேருந்தில் உக்கடத்தில் பூக்கடை வியாபாரம் செய்யும் செல்வராஜ் உக்கடத்தில் ஏறி சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் வரை செல்ல பயணச் சீட்டு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் அவர் மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறங்கிச் செல்ல வலியுறுத்தி உள்ளார். கிழே இறங்கிய செல்வராஜ் தரையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்தது.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை பிடித்ததுடன் போத்தனூர் காவல் நிலையதிற்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...