கோவை காந்திபுரம்- வேலாந்தாவளம் செல்லும் அரசு பேருந்து எண்: 48A இன்று மாலை 5 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து வேலாந்தவலம் நோக்கி சென்றது.
இந்த பேருந்தில் உக்கடத்தில் பூக்கடை வியாபாரம் செய்யும் செல்வராஜ் உக்கடத்தில் ஏறி சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் வரை செல்ல பயணச் சீட்டு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் அவர் மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறங்கிச் செல்ல வலியுறுத்தி உள்ளார். கிழே இறங்கிய செல்வராஜ் தரையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்தது.
இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை பிடித்ததுடன் போத்தனூர் காவல் நிலையதிற்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பேருந்தில் உக்கடத்தில் பூக்கடை வியாபாரம் செய்யும் செல்வராஜ் உக்கடத்தில் ஏறி சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் வரை செல்ல பயணச் சீட்டு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் அவர் மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறங்கிச் செல்ல வலியுறுத்தி உள்ளார். கிழே இறங்கிய செல்வராஜ் தரையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்தது.
இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை பிடித்ததுடன் போத்தனூர் காவல் நிலையதிற்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.