ஒரே நாளில் வரைபடம் அனுமதி வழங்க 'எஸ்பிரஸ் அப்ரூவல்' என்ற புதிய திட்டம் மாநகராட்சி சார்பில் அறிமுகம்


மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் வரைபடம் அனுமதி வழங்க 'எஸ்பிரஸ் அப்ரூவல்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் வீடு அல்லது ஏதேனும் கட்டுமான கட்ட வேண்டுமெனில், வரைபட அனுமதி பெற மாநகராட்சி நகரமைப்பு பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 4 ஆயிரத்திற்கும் அதிகமான அளவீடு என்றால் உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாகவும் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. எனினும் கோப்பு வடிவிலும் ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் விண்ணப்பங்கள் தேங்கி, இருமாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1,200 சதுர அடிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ஒரே நாளில் வரைபடம் அனுமதி வழங்க 'எஸ்பிரஸ் அப்ரூவல்' என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி சார்பில் விரைவில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பிரதான அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் காந்திமதி, நகரமைப்பு அலுவலர் சசிபிரியா, உதவி நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் உரிமம் பெற்ற கட்டிட வரையாளர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்; அங்கீகரிக்கப்பட்ட இடத்தில 1,200 சதுர அடிக்கு கட்டிடம் கட்டுவோர், உரிமம் பெற்ற கட்டிட வரையாளர்கள் மூலமாக தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பின் கோப்பு வடிவில் ஆவணங்களை நகரமைப்பு அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். கட்டிட அனுமதி கட்டணத்தை வங்கியில் செலுத்தி சலான் சமர்ப்பிக்கும் நாளன்று, ஒரே நாளில் அனுமதி அப்ரூவல் வழங்கப்படும். வாரத்தில் இருநாட்கள் புதன் மற்றும் வியாழன் அன்று மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12 மணிவரை சமர்ப்பிக்க வேண்டும். மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை உதவி நகரமைப்பு அலுவலர் அறிக்கையை சமர்பிப்பார். நகரமைப்பு அலுவலர் பரிந்துரைக்குப் பின் உத்தரவு வழங்கப்படும்" என தெரிவித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...