கோவை மாவட்டம், கோவைப்புதூர் அடுத்த எட்டிமடை வனப்பகுதியில் இன்று யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், உயிரிழந்துள்ள இந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். உடலில் எவ்வித காயங்களும் இல்லை. உணவு மற்றும் நீரின்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம்.

தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் பின்பே யானை உயிரிழந்ததற்கான உண்மை காரணம் தெரியவரும்" என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், உயிரிழந்துள்ள இந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். உடலில் எவ்வித காயங்களும் இல்லை. உணவு மற்றும் நீரின்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம்.

தொடர்ந்து, யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் பின்பே யானை உயிரிழந்ததற்கான உண்மை காரணம் தெரியவரும்" என்றனர்.