மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை!

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் மலேசிய அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு ஜூன் 10ம் தேதியன்று (நாளை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வைகோவுக்கு விசா வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கடந்த வியாழனன்று (நேற்று) நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தினை அவர்கள் அடைந்தனர். இந்நிலையில், வைகோ-வை சோதனையிட்ட மலேசிய குடிவரவு அதிகாரிகள், வைகோ மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயர் அதிகாரிகளை வைகோ சந்தித்த நிலையில், இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். வைகோவின் பாஸ்போட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி மற்றும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் ஆகியோர் முயற்சித்தும் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. 

இதனிடையே, இன்று இரவு 10.45 மணிக்கு மலேசியாவில் இருந்து சென்னை வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் வைகோ-வை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...