கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச வழக்குகள், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து, சொத்து தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும். நீதிமன்ற கட்டணம் திருப்பி வழங்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.




கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை மற்றும் அன்னூர் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் இந்த மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இதில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கப்படும்.




மேலும், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துகொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துகொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.




நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடன் வசூல் வழக்குகளுக்கும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும். இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்வு எட்ட, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் டிசம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.




இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...