மோடி விழாவின் இரண்டாவது கட்டம் தமிழ்நாட்டில் நான்கு நிகழ்ச்சிகளுடன் நாளை துவக்கம்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை ஜூலை முதல் தேதியிலிருந்து துவக்குவது என இலக்கு நிர்ணயித்துள்ள அரசு, அதனோடு கூடவே நேரடி அந்நிய முதலீட்டைக் கவர்ந்திழுப்பதை தடைசெய்யும் இடையூறுகளை அகற்றுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வர்த்தகத்தை சிரமமின்றி மேற்கொள்வதில் பெரும் முன்னேற்றம் இருப்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பின்னணியில்தான் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் விழாவாக (மோடி விழா) நாடுமுழுவதிலும் கொண்டாடி வருகிறது.

இந்த விழாவின் இரண்டாவது கட்டம் தமிழ்நாட்டில் நான்கு நிகழ்வுகளுடன் நாளை துவங்குகிறது. இதில் முக்கிய நிகழ்வு திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூரைத் தவிர இந்த நிகழ்வுகள் திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய இதர மூன்று இடங்களிலும் நடைபெற உள்ளன.

நாட்டின் நெசவாலைகளின் மையமாக விளங்கும் திருப்பூரில் நடைபெற உள்ள மோடி விழாவில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். நெசவுத் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட மத்திய அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் இந்த விழாவில் முன்னிலைப்படுத்தப்படும்.

மோடி விழாவின் முன்னறிவிப்பாக, இந்த நிகழ்வு பற்றிய செய்தியை, அதாவது இந்த விழா நடைபெற உள்ள நகர வளாகம் மற்றும் மூன்று நாள் நிகழ்ச்சிகளின் துவக்கம் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை மாவட்ட மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட வேன் ஒன்று மாவட்டம் முழுவதிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளின் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜூன் 2 ஆம் தேதியன்று சென்னையில் மோடி விழாவின் முதல் கட்டத்தைத் துவக்கி வைத்தார். 

இந்த மூன்று நாள் விழா அனைத்து மாநில தலைநகரங்களிலும் மேலும் நாட்டின் வேறு 300 மையங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது., ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவரும் முன்முயற்சிகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்கள், அரசு திட்டங்கள் ஆகியவை மட்டுமின்றி கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசின் சாதனைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைமையில் செயல்படும் மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நாடு முழுவதிலும் பயணம் செய்து வருகின்றனர்.

அரசின் முயற்சிகள் குறித்த இந்த செய்தியை மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பதற்கான திட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்குவது பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் மோடி விழா ஆகும். அரசின் முக்கிய பெரும் திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்கும் கண்காட்சி, மத்திய அரசால் துவக்கப்பட்ட பெரும் கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் ஆகியவை இந்த விழாவின் பகுதியாக அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வின் மிகவும் வித்தியாசமான அம்சம் என்பது ஜன் கி பாத் எனப்படும் அரசின் செயல்பாடு குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக சாதாரண குடிமக்களும் நேரடியாக பிரதமரிடம் தெரிவிக்கும் ஏற்பாடு ஆகும். மேலும் ஜன் தன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகள் காப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களை முன்னிலைப்படுத்தும் அரங்குகள் இந்தக் கண்காட்சியில் அமைந்திருக்கும்.

மத்திய அரசின் டிஜிட்டல் வகையிலான முன்முயற்சிக்கு இணங்க, பொத்தானை அழுத்தியதும் அரசினால் துவங்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த திட்ட வாரியான தகவல்கள் இந்தக் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும். அதைப் போன்றே தனிநபர்களின் தேவைக்கு ஏற்ப திட்டவாரியான தகவல்களை வழங்கும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தகவல் அரங்குகள் வழங்கும். மற்றொரு புதுமையான கருத்து என்பது பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது. இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுயர கட் அவுட்டுடன் பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். பல்வேறு விஷயங்கள் குறித்தும் நிபுணர்கள் வழிகாட்டும் உரையாடல் மேடைகள், பல்வேறு அமைச்சகங்களும் வெளியிட்டுள்ள கைபேசி செயலிகளை தரவிறக்கிக் கொள்ளும் ஏற்பாடு, அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற இதர நிகழ்வுகளும் இந்த மூன்று நாள் நிகழ்வில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...