திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி போரட்டம்



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி போரட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்  மாவட்டம்  பல்லடம் அடுத்த சாமளாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி  அப்பகுதி பொதுமக்கள் சாமளாபுரம் - மங்களம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவ்வழியே வந்த சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து என்ன செய்வது எனத்தெரியாத அவர், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தானும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து  மக்களுடன் அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு அதிகளவு போலிசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் பொதுமக்கள் போராட்டத்தினை தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த கலவரத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை திருப்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்தார். நாடுமுழுவதும் இந்த பிரச்சனை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர், 

கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு அவருக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கியுள்ளது. அரசு நிர்வாகத்தின் இந்த முடிவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...