குன்னூரில் 59-வது பழக்கண்காட்சி கோலாகலமாக இன்று துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜுனன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாபழம், பம்ளிமாஸ், முலாம் பழம் வாழை பிளம்ஸ், எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை டன் திராட்சை மற்றும் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காளையை இளைஞர் அடக்குவது போன்ற அமைப்பு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 



மேலும், பழங்களால் உருவாக்கப்பட்டுள்ள காளை மாடு, ஆடு, செம்மறி ஆடு, காட்டெருமை, வரையாடு உள்ளிட்ட விலங்குகளின் வடிவங்களை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.



மேலும், அரிய வகை பழங்களான பீச், ப்ளம், விக்கி உள்ளிட்ட 120 வகைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பழக்கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...