குன்னூரில் 59-வது பழக்கண்காட்சி கோலாகலமாக இன்று துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 59-வது பழக்கண்காட்சி இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜுனன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் பலாபழம், பம்ளிமாஸ், முலாம் பழம் வாழை பிளம்ஸ், எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம் உள்ளிட்ட பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.



ஒன்றரை டன் திராட்சை மற்றும் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காளையை இளைஞர் அடக்குவது போன்ற அமைப்பு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 



மேலும், பழங்களால் உருவாக்கப்பட்டுள்ள காளை மாடு, ஆடு, செம்மறி ஆடு, காட்டெருமை, வரையாடு உள்ளிட்ட விலங்குகளின் வடிவங்களை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.



மேலும், அரிய வகை பழங்களான பீச், ப்ளம், விக்கி உள்ளிட்ட 120 வகைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பழக்கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...