அன்னூரில் 112 பயணாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் வழங்கினார்

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் கம்மாளத்தொட்டிப்பாளையம் கிராமத்தில் வருவாய்த்துறையின் மூலம் 112 பயணாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடங்களையும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திறந்து வைத்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேசுகையில், கோவையில் சீரான முறையில் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளும் வகையில் அன்னூர், அவினாசி உட்பட 3 பேரூராட்சிகளுக்கு ரூ.220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் சீராக வழங்க ஆவணம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிராம பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மூலம் வெகு விரைவில் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்ந்திட வாய்ப்பு உள்ளது.

இதுபோல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உங்களுடன் இருப்பேன். தற்பொழுது உங்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடிவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளேன். ஒரு மாத காலத்திற்குள் உரிய ஆணையினை நானே நேரில் வந்து உங்களிடம் வழங்குவேன்" என சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.



இன்று நடைபெற்ற இவ்விழாவில் வீட்டுமணை பட்டா 25 பயணாளிகளுக்கும், பட்டா மாறுதல் 38 பயணாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 36 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பாதுகாப்பு பத்திரம் ஆணையினையும் என 112 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கியதுடன் அப்பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மையத்தையும், குரும்பபாளையம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட மையத்தையும் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், அன்னூர் வட்டாட்சியர் ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...