தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைந்த அளவு சிமெண்ட்டையே வழங்குவதாகவும் அமைச்சர் வேலுமணி  தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் இன்று  கோவை வந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் சேலம் சென்றார். பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து  வருகின்றது என்றார்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை தமிழக அரசு நிகழ்ததி இருக்கன்றது என தெரிவித்தார்.மேலும் லாரிகள் மூலம் 6700 நடை குடிநீர்  சென்னையில் உள்ள மக்களுக்கு  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல்  எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை  விட குறைவாகவே சிமெண்ட் வழங்குவதாகவும் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் உருவப்படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி,எதிர்கட்சிகளுக்கு தங்கள் குற்றப்பின்ணனி குறித்தும் தெரியும் எனவும் சட்டப்படி ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...